27 October 2006

எதற்கு?


எதற்கு ப்ளாக்கர்?

தேன்கூட்டில ஓட்டு போடறதுக்கு மட்டும்தானா ப்ளாக்கர்? எப்பவாச்சும் சில சம்யந்தான் நல்ல தலைப்பு கொடுத்து, நல்ல கதை வருது. சிலபேரு கதைன்னுட்டு அரட்டைக் கச்சேரி பண்ணியிருப்பாங்க. அதுல போயி ஓட்டு போட, யாராவது ப்ளாக் ஆரம்பிப்பாங்களா?

உங்க மனசு கேக்கற கேள்வி சரிதான்...

அதுக்கு மட்டுமில்லங்கண்ணா.. இப்பல்லாம், தமிழ்மணமும், தேன்கூடும் படிக்க அவ்வளவு சுவராஸ்யமா இல்லங்கண்ணா? எல்லாவிதப்பட்ட அரசியல் கட்சிங்களுக்கும் இலவசமா கொள்கை பரப்பு செயலாளர்களா நிறைய மக்கள் எழுதிகிட்டு இருக்காங்கண்ணா..

நம்ம திருவாளர் பொது ஜனம் சார்பா பேச..எழுத ஆளு கம்மியாயிடுச்சி.. அவரும் என்ன மாதிரி ''பே..பே..' ன்னு முழிச்சிகிட்டு இருக்காரு. அதான்..அந்த முழி முழிச்சுகிட்டு யோசிக்கிறத அப்படியே எழுதத்தான் இந்த ப்ளாக்.

சோத்துக்கட்சி கூட்டாளிங்க எல்லாம் ஒன்னா சேரவாங்கப்பா...

2 comments:

நாமக்கல் சிபி said...

எங்களை வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலியே?

- அப்பாவி பொது ஜனம்.

சோத்துக்கட்சி said...

இல்லீங்கண்ணா. இது நம்ம பிரச்னைகளைச் சொல்ல ஒரு தளம்.