27 October 2006

எப்படி?

எப்படி?


சோத்துக்கட்சி ஆரம்பிச்சாச்சி. எப்படி இத நடத்துறது? என்னல்லாம் இதுல எழுதப்போறீங்கன்னு..அதுக்குள்ள உறுப்பினர் அட்டையோட வந்து நிக்கற ஒரு சகோதரர் கேக்கறார்?

'வர்ரப்பவே கேள்வி கேட்டுக்கிட்டு வர்ரான....இவனச் சேக்கலாமா? பின்னாடி பவர் சேந்த உடன பிரிச்சிகிட்டு ஓடிருவானோ?'ன்னு ஒரு எண்ணம் மனசுல வந்தது. 'அடச்சீ....கட்சின்னு ஆரம்பிச்சவே மனசுல எல்லா அரசியலும் வர ஆரம்பிச்சிடுச்சேன்னு'...வந்த சிந்தனையை தள்ளிட்டு 'நானே..இப்பத்தான் கடையை திறந்திருக்கேன்..நீ அதுக்குள்ள பெரிய கேள்விலாம் கேக்கறீயப்பா.. எப்படியாவது நடத்தலாம்ப்பா.. பொதுஜனம் எப்பவும் நல்லதுதான் நினைக்கும்..நாமும் நல்லது நினைக்கிற வரை..எல்லாம் நல்லபடியா போகும்ப்பா. .நீ வந்து கட்சியிலசேருப்பா..' ன்னு சொல்லி உறுப்பினர் அட்டையை கொடுத்தேன்.

அடையாள அட்டையை வாங்குன சகோதரர், 'யாராவது கட்சியோட கொள்கை என்னான்னா, என்ன சொல்ல...'

'நல்லா கேள்வி கேட்ட போ. சோத்துக்கட்சிக்கு கீழே என்ன எழுதியிருக்கு பாரு...அதான் நம்ம கொள்கை' ன்னேன்.

எப்படிங்க...ஓகே வா?

No comments: